Translate

Friday, December 23, 2016

சிறுகதைப் போட்டி முடிவுகள்

சிறுகதைப்  போட்டி முடிவுகள்

சிற்றிதழ்கள் உலகம் சிறுகதைப்  போட்டி முடிவுகள்.

வணக்கம் நண்பர்களே. 
சிற்றிதழ்கள் உலகம் நடத்திய சிறுகதை போட்டிக்கு 15 கதைகள் வர பெற்றன. அந்த கதைகளின்,  எழுதியவர்களின் பெயருக்கு பதிலாக எண்  வழங்கப்பட்டு ஒப்புக் கொண்ட 4 நடுவர்களின்   இமெயிலுக்கு அனுப்பப்பட்டது. அதில் கவிஞர் ஜெய தேவன் அவர்களின் கணினி பழுதடைந்த காரணத்தால் அவர் பங்கேற்க்கவில்லை. மற்ற 3 நடுவர்களின் மதிப்பெண்களின் கூட்டுத் தொகையின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதில் நம்முடைய பணி  என்பது  ஒருங்கிணைப்பு மட்டும் தான். 

கடும் போட்டி. ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் இடம் நழுவிப்  போகும் நிலை. இந்த முடிவுகள் எந்த எழுத்தாளரையும் குறைத்து மதிப்பிடக் கூடியது இல்லை. கடும் போட்டிக்கிடையில் ஒரு மதிப்பெண் அதிகம் பெற்று முதலிடத்தை பெறுபவது  திருமதி.உமா குமரி உத்ரா [எ ] உமா மஹேஸ்வரி அவர்கள் எழுதிய  "தண்ணீர்" என்ற சிறுகதை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துக்கள் திருமதி.உமா அவர்களே. அவருக்கு முதல் பரிசாக சிற்றிதழ் ஒன்றுக்கு ரூ .300/= சந்தா  செலுத்தப்படும். இந்த சிறுகதை மகா கவி சனவரி மாத சிற்றிதழில் வெளிவர இருக்கிறது. 



இரண்டாம் இடத்திற்க்கு 5 நண்பர்களின் கதைகளுக்கிடையே கடும்போட்டியில் 2 சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இரண்டும் சம மதிப்பெண்கள் பெற்றிருந்தன. ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் 3 கதைகள் வாய்ப்பை இழந்தன. வெற்றி பெற்றவர்கள் : 
1. மனோ பாரதி எழுதிய  "தாய்மை".
2. கார்த்திகேயன் சரவணன் எழுதிய  "தாயுமானவன்".

வாழ்த்துக்கள் நண்பர்களே. 2வது  பரிசான ரூ .200/= இரன்டு நண்பர்களுக்கும் ஒருவருட சந்தா, சிற்றிதழ் ஒன்றுக்கு சந்தா காட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மூன்றாவது  இடத்திற்கு ஒரே முட்டல், மோதல். சம மதிப்பெண் பெற்ற 3 கதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
1. திருமதி.சபியா காதர் , இலங்கை  - ப்ளுட்டிஸ்ட் 
2. பரிவை சே.குமார் - நாய்க்கு வாழ்க்கைப்பட்டால் 
3. ஆசிப் அலி - சீனிவாசனின் சந்தேகம் 

மூன்றுபேருக்கும் காலாண்டிதழ் ஒன்றின் பி.டி.எப். பிரதி ஒரு ஆண்டுக்கு இமெயில் மூலம் அனுப்பப்படும். 

இந்த போட்டியில் பங்கெடுத்த அனைத்து எழுத்தாளர்களையும் பாராட்டும் விதமாக புதுமைப் பித்தன் சிறுகதைகள் என்ற புத்தகத்தின் பி.டி.எப். பிரதி இமெயில் மூலம் அனுப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 
போட்டியில் பங்கெடுத்த நண்பர்கள்.
1. திருமதி. அபிநயா ஸ்ரீகாந்த் 
2. திரு.முகம்மது பாட்சா 
3. திருமதி.மலர் மதி.
4.ஸ்வேதா கோபால் 
வாழ்த்துக்கள் நண்பர்களே. 

இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும், என் வேண்டுகோளை ஏற்று நடுநிலையான தீர்ப்பைக்  கொடுத்துள்ள 3 நடுவர்களுக்கும் சிற்றிதழ்கள் உலகம் இதயபூர்வமான நன்றிகளையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகின்றேன். 

நடுவர்கள் : 
1. திரு.ஜவாத் மரைக்கார், இலங்கை.
2. திரு.சுப்ரா வே. சுப்ரமணியன் 
3. திரு.முருக தீட்சண்யா. 


கிருஷ்.ராமதாஸ்,
சிற்றிதழ்கள் உலகம்.
24.12.2016.



2 comments:

  1. வாழ்த்துக்கள் உமா மற்றம் பரிசில் / பங்குகொண்ட பெற்ற அனைவருக்கும்...

    ReplyDelete
  2. நன்றி நண்பரே ..,

    ReplyDelete