சிற்றிதழ் விமர்சனம் - 3.
நிகரன் சிற்றிதழ்
விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்திலிருந்து திரு.பாஸ்கரன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளி வரும் இரு மாத சிற்றிதழ் தான் நிகரன்.
ஜோக்கர் திரைப்படத்தின் இயக்குனர் திரு.ராஜு முருகன் முகப்புப் படத்தை கொண்டு வெளியாகி உள்ளது.
1. மகா கவி பாரதியின் நினைவு நாளை போற்றும் வகையில் மூன்று கவிதைகள் பிரசுரிக்கப் பட்டுள்ளது சிறப்பாகும்.
2. நெசவுக் குடும்பத்தில் பிறந்து, கரிசல் மண்ணின் கலை, இலக்கியம் , வாழ்வியல் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு, இசைக் கலைஞனாக வாழ்ந்து மறைந்த திரு.திருவுடையான் குறித்த நினைவுக் கட்டுரை சிறப்பு. திருவுடையானுடன் திரை இசை மேதைகள் கொண்ட ஈர்ப்பு குறித்த பதிவுகள் அருமை. உடல் மறைந்தாலும் இசை உயிரோடு கலந்து பட்டி தொட்டிகளெல்லாம் வாழ்ந்து வருகிறது என்று முத்தாய்ப்பாக முடித்துள்ளது அருமை.
3. திரு.லட்சுமண பெருமாள் அவர்களின் கரிசல் நாட்டு கருவூலங்கள் என்ற சிறு கதைத் தொகுப்பிலிருந்து " அதே மூத்தாளி " என்ற சிறு கதை வெளியாகியுள்ளது. இந்த சிறு கதை கரிசல் மண்ணின் கலாசாரத்தையும் , வாழ்க்கை முறையும், பேச்சு வழக்கையும் முழுமையாக வெளிப்படுத்து சிறப்பானது .
4. கணிதமும் விநோதமான புனைவு என்ற தலைப்பில் வேலாயுதம் பொன்னுசாமி அவர்கள் உலக புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை பற்றி எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை இந்த இதழுக்கு மகுடமகா திகழ்கிறது. நகுலனை வாசிக்க நனவோடை உத்தியும், போர்ஹேயின் சிறுகதைகளை வாசிக்க கண கணிதம், வடிவ கணிதம், விநோதங்கள் பற்றி புரிதலின் அவசியத்தை வெளிப் படுத்துகின்றார். திரு.பிரமீள் அவர்கள் [ E = mc2 ] என்ற சூத்திரத்தை தலைப்பாக கொண்டு எழுதிய கவிதை முயற்சியை முன்னிலைப்படுத்தி உள்ளார். தொடக்கத்திற்கும் இறுதிக்கும் இடைப்பட்டவைகளை தீர்மானிப்பதை இட்டு கட்டுதல் என்று போர்ஹே கூறுவதையும், ஒட்டி புழுகுதல் என்ற புதுமைப்பித்தனின் கருத்தையும் ஒப்பிட்டிருப்பது அருமை.
நிகரன் சிற்றிதழ்
விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்திலிருந்து திரு.பாஸ்கரன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளி வரும் இரு மாத சிற்றிதழ் தான் நிகரன்.
ஜோக்கர் திரைப்படத்தின் இயக்குனர் திரு.ராஜு முருகன் முகப்புப் படத்தை கொண்டு வெளியாகி உள்ளது.
1. மகா கவி பாரதியின் நினைவு நாளை போற்றும் வகையில் மூன்று கவிதைகள் பிரசுரிக்கப் பட்டுள்ளது சிறப்பாகும்.
2. நெசவுக் குடும்பத்தில் பிறந்து, கரிசல் மண்ணின் கலை, இலக்கியம் , வாழ்வியல் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு, இசைக் கலைஞனாக வாழ்ந்து மறைந்த திரு.திருவுடையான் குறித்த நினைவுக் கட்டுரை சிறப்பு. திருவுடையானுடன் திரை இசை மேதைகள் கொண்ட ஈர்ப்பு குறித்த பதிவுகள் அருமை. உடல் மறைந்தாலும் இசை உயிரோடு கலந்து பட்டி தொட்டிகளெல்லாம் வாழ்ந்து வருகிறது என்று முத்தாய்ப்பாக முடித்துள்ளது அருமை.
3. திரு.லட்சுமண பெருமாள் அவர்களின் கரிசல் நாட்டு கருவூலங்கள் என்ற சிறு கதைத் தொகுப்பிலிருந்து " அதே மூத்தாளி " என்ற சிறு கதை வெளியாகியுள்ளது. இந்த சிறு கதை கரிசல் மண்ணின் கலாசாரத்தையும் , வாழ்க்கை முறையும், பேச்சு வழக்கையும் முழுமையாக வெளிப்படுத்து சிறப்பானது .
4. கணிதமும் விநோதமான புனைவு என்ற தலைப்பில் வேலாயுதம் பொன்னுசாமி அவர்கள் உலக புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை பற்றி எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை இந்த இதழுக்கு மகுடமகா திகழ்கிறது. நகுலனை வாசிக்க நனவோடை உத்தியும், போர்ஹேயின் சிறுகதைகளை வாசிக்க கண கணிதம், வடிவ கணிதம், விநோதங்கள் பற்றி புரிதலின் அவசியத்தை வெளிப் படுத்துகின்றார். திரு.பிரமீள் அவர்கள் [ E = mc2 ] என்ற சூத்திரத்தை தலைப்பாக கொண்டு எழுதிய கவிதை முயற்சியை முன்னிலைப்படுத்தி உள்ளார். தொடக்கத்திற்கும் இறுதிக்கும் இடைப்பட்டவைகளை தீர்மானிப்பதை இட்டு கட்டுதல் என்று போர்ஹே கூறுவதையும், ஒட்டி புழுகுதல் என்ற புதுமைப்பித்தனின் கருத்தையும் ஒப்பிட்டிருப்பது அருமை.